கள்ளக்காதலுக்கு உடந்தையாக இருந்த ரவுடி.. திண்டுக்கல்லில் பரபரப்பு சம்பவம்.!!
Dindigul illegal affair help rowdy murder by gang
திண்டுக்கல் மாவட்டத்தில் நண்பனின் கள்ளக்காதலுக்கு ஆதரவாக இருந்த ரவுடி வெட்டி கொலை செய்ப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலையை பதிவு செய்துள்ளது. தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் பாளையம் பகுதியை சார்ந்தவர் சுள்ளான் ரமேஷ்.
இவர் ரவுடியாக இருந்து வந்த நிலையில், கடந்த 8 ஆம் தேதி கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், கள்ளக்காதலில் கொலை அரங்கேறியது தெரியவந்தது.
இது குறித்த விசாரணையில், சுள்ளான் ரமேஷின் அலைபேசி அழைப்புகள் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில், தனது நண்பன் தவமணியின் கள்ளக்காதலுக்கு சுள்ளான் ரமேஷ் ஆதரவாக செயல்பட்டு வந்த நிலையில், கள்ளகாதலியின் கணவன் ஹைசன், வினோ மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து கொலையை அரங்கேறியது தெரியவந்துள்ளது.
இந்த விசாரணைக்கு பின்னர், கைதான ஆறு பேரின் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், இது குறித்த விசாரணை தொடரப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Dindigul illegal affair help rowdy murder by gang