பழனி கோவிலுக்கு செல்ல திட்டமா?. இந்த 2 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை..!
Dindigul District Collect orate Announce Palani Temple 2 and 3 Aug Peoples Could Not Visit Here
02.08.2021 மற்றும் 03.08.2021 ஆகிய 2 நாட்கள் பழனி கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது என திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், " தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகள் இன்றி ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு என மாணர்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் அறிவிப்பு வெளியிடப்பட்டதனைத் தொடர்ந்து, கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறைக்கு அறிவுரை வழங்கியுள்ளார்கள்.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கொரோனா நோய்த் தொற்று கூழிந்லைகளை கருத்திற்கொண்டும், தமிழக அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படியும், திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் ஆடிக்கிருத்திகை மற்றும் ஆடி பதினெட்டாம் நாள் பெருவிழாவை முன்னிட்டு அதிக அளவிலான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும் பொருட்டு 02.08.2021 மற்றும் 03.08.2021 ஆகிய நாட்களில் திருக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி நாட்களில் திருக்கோயிலில் ஆகம விதிப்படி நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் திருக்கோவில் பணியாளர்கள் மூலம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே, 02.08.2021 மற்றும் 03.08.2021 ஆகிய நாட்களில் பொதுமக்கள் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலுக்கு வருகை தர வேண்டாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Dindigul District Collect orate Announce Palani Temple 2 and 3 Aug Peoples Could Not Visit Here