தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு பசுபதி பாண்டியன் கொலைக்கு பழிக்குப்பழி?.. திண்டுக்கல்லில் பரபரப்பு.!
Dindigul Devendra Kula Velalar Pasupathy Pandiyan Murder Issue Revenge Murder Woman Kills
பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண்மணி படுகொலை செய்யப்பட்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நந்தவன்பட்டியில், கடந்த 2012 ஆம் வருடம் ஜனவரி மாதம் 10 ஆம் தேதி தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனரான பசுபதி பாண்டியன், அவரின் வீட்டில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் தூத்துக்குடியை சார்ந்த சுபாஷ் பண்ணையார் உட்பட 18 பேர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, இவ்வழக்கு தொடர்பான விசாரணை திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் தொடர்புடைய நந்தவனப்பட்டி பகுதியை சார்ந்த நிர்மலா தேவி (வயது 60), இன்று அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.
திண்டுக்கல்லில் உள்ள செட்டிநாயக்கன்பட்டி இ.பி காலனி டேவிட் நகர் பகுதி அருகே கொலை செய்து, தலையை தனியாக வெட்டியெடுத்து பசுபதி பாண்டியனின் வீட்டில் போட்டுவிட்டு மர்ம கும்பல் தப்பி சென்றது.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் அதிகாரிகள், நிர்மலா தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த கொலை சம்பவம் பழிக்குப்பழியாக நடந்திருக்கலாம் என தெரியவந்துள்ளதால், கலவரம் போன்ற பதற்றமான சூழ்நிலையை தவிர்க்க காவல் துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Dindigul Devendra Kula Velalar Pasupathy Pandiyan Murder Issue Revenge Murder Woman Kills