திண்டுக்கல்: கல்லூரி மாணவியின் வாழ்க்கையில் விளையாடிய முன்னாள், இந்நாள் காதல் கொடூரன்கள்..! - Seithipunal
Seithipunal


முன்னாள், இந்நாள் காதலர்கள் பெண்ணுக்கு எதிராக செய்த செயல் குறித்த பதைபதைப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 2 காதலர்களின் 2 நண்பர்களுக்கும் வலைவீசப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை அருகேயிருக்கும் மைக்கேல்பாளையம் பகுதியை சார்ந்த கல்லூரி மாணவி, கடந்த வருடம் கல்லூரியில் படிக்கையில் திண்டுக்கல் இரட்டைமலை பகுதியை சார்ந்த சதீஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். காதலித்து வருகையில் காதலின் காதல் - காம மொழிகளின் மீதான மயக்கத்தால், மாணவி தனது அந்தரங்க புகைப்படத்தை சதீஷுக்கு அனுப்பி வைத்து இருக்கிறார். 

இந்த சூழ்நிலையில், சதீஷுக்கும் - மாணவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட பிரிந்து இருக்கின்றனர். இந்த தருணத்தில், காயத்திற்கு மறுந்துபோடும் அளவு பேசும் வகையில் முகநூலில் தூத்துக்குடியை சார்ந்த அருண் பிரபு என்பவர் நட்பு கிடைக்க, அவரும் மாணவியை தன்வசப்படுத்தி பல கவிதைகள் பேசி வந்துள்ளார். பின்னர், இந்த விஷயம் காதலாக மாறவே, இந்த காதல் விவகாரம் முன்னாள் காதலன் சதீஷுக்கு தெரியவந்துள்ளது. 

இதனால் பெரும் ஆத்திரத்திற்கு உள்ளாகிய சதீஷ், தனது நண்பரான நெல்சன் என்பவரின் உதவியுடன் அருண் பிரபுவின் அலைபேசி எண்ணை கண்டறிந்து, மாணவி குறித்து அவதூறு பேசி, அவள் எனக்கு அந்தரங்க புகைப்படத்தை அனுப்பி இருக்கிறார் என சில புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளார். இருவரிடமும் பரிமாறிய புகைப்படங்கள் சதீஷின் நண்பர் நெல்சனிற்கும், தூத்துக்குடி பிரபுவின் நண்பர் விஷவா என்பவருக்கும் கிடைத்துள்ளது. 

இவர்கள் அதனை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யவே, இந்த விஷயம் மாணவிக்கு தெரியவந்துள்ளது. இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த மாணவி தனது பெற்றோரிடம் விஷயத்தை கூறி இருக்கிறார். பெற்றோர்கள் இது குறித்து நிலக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அவர்கள் சைபர் கிரைம் காவல் துறையினர் உதவியுடன் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

விசாரணையில், மாணவி தனது காதலர் சதீஷுக்கு அனுப்பிய புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றியது திண்டுக்கல் சதீஷ், மைக்கேல்பாளையம் நெல்சன், தூத்துக்குடி அருண் மற்றும் விஷ்வா என்பது உறுதியாகவே, அனைவரின் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்களில் சதீஷ் மற்றும் நெல்சனை கைது செய்த காவல் துறையினர், அருண் மற்றும் விஷ்வா ஆகியோரை தேடி வருகின்றனர். 

பருவக்காதல்கள் எப்படி ஆபத்தானதோ., அதனைப்போன்று தனது அந்தரங்க புகைப்படத்தை காதலனின் காம பேச்சில் மயங்கி அனுப்பி வைப்பதும் தான்.. தனது தனிப்பட்ட விஷயம் அல்லது புகைப்படம் ஒருவனுக்கு ஆதாரத்துடன் கிடைத்தால் அதனை அவன் எப்படி வேண்டும் என்றாலும் உபயோகம் செய்யலாம் என்பதை மறக்க வேண்டாம். மனவலிமை கொண்டு கசப்பான அனுபவத்தில் பாடத்தை கற்று வெளியே வர முயற்சிக்க வேண்டும்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul College Girl Share Private Image to Love Boy He Cheats and Upload Social Media


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->