17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. திண்டுக்கல்லில் சோகம்.!!
Dindigul Child sexual abuse police arrest culprit
தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சாணார்பட்டி எமகலாபுரம் பகுதியை சார்ந்தவர் வீரமணி (வயது 36). இவர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இதே பகுதியில் 17 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார்.
இந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். சிறுமிக்கும், வீரமணிக்கும் இடையே நட்பு ரீதியான பழக்கம் ஏற்பட்ட நிலையில், காமுகன் நாளடைவில் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி காதலிக்க வைத்துள்ளான்.
இந்நிலையில், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறிய காமுகன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இந்த விஷயம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவரவே, இந்த விஷயம் தொடர்பாக சாணார்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வீரமணியின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Dindigul Child sexual abuse police arrest culprit