கட்டிக்கிட்ட பெண்ணுடன் வாழத்தெரியாமல், சிறுமியின் வாழ்க்கையை சீரழிக்க தெரிந்த கொடூரன்.. திண்டுக்கல்லில் பகீர்.!!
Dindigul child girl kidnapped by drama lover
ஒட்டன்சத்திரத்தில் 14 வயது சிறுமிக்கு திருமண ஆசைகாட்டி கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் பாளையங்கோட்டை பகுதியைச் சார்ந்தவன் ஹரிஹரன். இவனுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து மனைவி இருக்கிறார். ஆனால், குடும்ப தகராறு காரணமாக மனைவியை பிரிந்து, விவாகரத்து பெற்றுள்ளார்.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியின் மீது, காமுகனிற்கு மோகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பல சித்து வேலைகள் புரிந்து, சிறுமியை தனது வலைகளில் வீழ்த்தியுள்ளான். கயவனின் சுயரூபம் அறியாத சிறுமியும், அவனை காதலித்து வந்துள்ளார்.
இந்த சூழ்நிலைக்கு உள்ளாகவே சிறுமி மாயமாகியுள்ளர். இவரை காணாது பெற்றோர்கள் தேடியலைந்த நிலையில், சிறுமி ஹரிஹரனால் கடத்தப்பட்ட சம்பவம் தெரியவந்துள்ளது. மேலும், இருசக்கர வாகனம் மூலமாக சிறுமியை தனது இல்லத்திற்கு ஹரிஹரன் அழைத்து சென்றுள்ளான்.
இந்த விஷயம் தொடர்பாக பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் ஹரிஹரனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Dindigul child girl kidnapped by drama lover