தள்ளாடியபடி பேருந்தை மறித்து ரகளை.. காலையிலேயே போதையில் சம்பவம்.. திண்டுக்கல்லில் அரங்கேறும் அவலங்கள்.!!
Dindigul Bus Stand Govt Bus Went Dindigul to Madurai Interrupted By Drunken Liquor Alcohol Youngster
பேருந்து நிலையம் அருகே மதுபோதையில் அரசு பேருந்தை செல்லவிடாமல் இடைமறித்து நூதன தொல்லை கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
திண்டுக்கல் பேருந்து நிலையத்தின் சுற்றுவட்டார பகுதியில் 5 மதுபான கடைகள் இயங்கி வருகிறது. இந்த மதுபானக்கடைகளுக்கு வரும் ஆசாமிகள், மதுபானம் அருந்திவிட்டு பிரதான சாலைகளில் படுத்து உறங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்தில் 3 முறை அரசு பேருந்துகள் மதுபோதை ஆசாமியால் மறிக்கப்பட்டு ரகளை செய்யும் சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில், இன்று காலை மதுபானக்கடைக்கு வந்து இளைஞர் மதுபானம் அருந்திவிட்டு அங்குள்ள திருவள்ளுவர் சாலை அருகே வந்துள்ளார்.
அங்கு, திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு செல்லும் அரசு பேருந்து வந்த நிலையில், பேருந்தை இடைமறித்த மதுபோதை ஆசாமி பேருந்துக்கு முன்புறம் விழுந்து பேருந்து மற்றும் ஓட்டுனரை பார்த்து வணங்குவது, ஓட்டுனருக்கு கும்பிடு வைப்பது, பேருந்தை பார்த்து சாமி தரிசனம் செய்வது போன்று கைகளை தூக்கி காண்பிப்பது என ரகளையில் ஈடுபட்டார்.
இதனால் செய்வதறியாது திகைத்த வாகன ஓட்டுநர் வாகனத்தை அப்படியே நிறுத்திய நிலையில், சிறுது நேரத்திற்கு பின்னர் மதுபோதை இளைஞர் பேருந்துக்கு வழியை விட்டார். மேலும், இதனை கண்ட பொதுமக்களும், பேருந்தின் நடத்துனரும் எதுவும் செய்ய இயலாத சூழலில் விழிபிதுங்கி நின்று கொண்டு இருந்தனர்.
இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், காவல் துறையினர் மதுபோதை ஆசாமிகள் அட்டகாசத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றும், எதோ ஒரு சூழ்நிலையில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்னர் காவல் துறையினர் சுதாரிக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Dindigul Bus Stand Govt Bus Went Dindigul to Madurai Interrupted By Drunken Liquor Alcohol Youngster