முதியவரிடம் பணம் கேட்டு அடித்துக்கொலை செய்த போதை ஆசாமிகள்.. திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பயங்கரம்.! - Seithipunal
Seithipunal


பேருந்து நிலையத்தில் முதியவரிடம் பணம் கேட்டு மிரட்டி,  அவரை போதை கும்பல் கொலை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட வணிக வளாகங்கள் தற்போது வரை பயன்பாடுகளுக்கு வராமல் உள்ள நிலையில், அங்கு ஆதரவற்றோர் தங்கி இளைப்பாறி வருகின்றனர். மேலும், இரவு வேளைகளில் அங்கேயே உறங்குவதும் வழக்கம். 

இந்நிலையில், பேருந்து நிலையத்தில் இரவு மற்றும் பகல் வேளைகளில் கஞ்சா மற்றும் மதுபோதையில் சுற்றி வரும் நபர்கள், இவ்வாறான ஆதரவற்ற நபர்களை மிரட்டி தாக்கி பணம் பறித்து செல்லும் கொடூரம் அடிக்கடி நடந்து வருகிறது. 

இந்நிலையில், 50 வயது மதிக்கத்தக்க முதியவர் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உறங்கிக்கொண்டு இருந்த நிலையில், அங்கு வந்த மர்ம கும்பல் அவரிடம் பணம் கேட்டு மிரட்டி இருக்கிறது. முதியவர் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்த நிலையில், பல் துலக்கும் பிரசால் முதியவரின் வாயில் குத்திய கொடுரரர்கள், அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். 

இதனால் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து பலியாகியுள்ளார். முதியவர் பிணமாக கிடப்பதை கண்ட அப்பகுதி மக்கள் திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், முதியவரின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு விசாரணை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். கொலை செய்யப்பட்ட முதியவர் யார்? எந்த ஊரை சார்ந்தவர் என்பது தொடர்பாகவும் விசாரணை நடந்து வரும் நிலையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரையும் தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul Bus Stand Aged Man Murder by Drunken Culprits 29 July 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->