நடுரோட்டில் சோப்பு போட்டு, நுரை பொங்க குளித்த சமூக ஆர்வலர்.! வைரல் போட்டோ.!  - Seithipunal
Seithipunal


திருப்பூரில், சமூக ஆர்வலர் ஒருவர் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருவதை கண்டிக்கும் விதமாக, அவ்வாறு வீணாகும் குடிநீரில் சோப்பு போட்டு குளித்து நூதன போராட்டம் செய்து கவனத்தை ஈர்த்துள்ளார். 

திருப்பூர்- அவிநாசி சாலையில் இருக்கும் பங்களா ஸ்டாப் பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் குழாய் ஒன்று உடைந்து லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் தொடர்ந்து வீணாகி வருகின்றது. 

பலமுறை பொதுமக்கள் இதுகுறித்து புகாரளித்தும் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது. 

இந்த நிலையில், அதே பகுதியை சமூக ஆர்வலரான சந்திரசேகர் குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் தேங்கி நிற்கும் குடிநீரில் இறங்கி, சோப்பு போட்டு நுரை பொங்க குளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

different protest in thirupur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->