திமுகவில் அதிருப்தியில் இருக்கும் தயாநிதி மாறன்! புயலை கிளப்பிய துரைமுருகன்!  - Seithipunal
Seithipunal


மத்திய சென்னை மக்களவை உறுப்பினராக இருப்பவர் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் பேரன் தயாநிதிமாறன். இவர் எதிர்பார்த்து காத்திருந்த பதவியை லாவகமாக துரைமுருகன் தனது மகனுக்கு பெற்றுக்கொண்டு செல்ல, அதிருப்தியில் இருக்கிறாராம் தயாநிதி மாறன். 

வேலூர் மக்களவை தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், இன்னும் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக் கொள்ளவில்லை. இருந்தாலும், சென்னை ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட எம்பிக்கள் கூட்டம் ரயில்வே பொது மேலாளர் முன் நடைபெற்றது. இதில் சென்னை ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட எம்பிகள் அனைவரும் கலந்து கொண்டனர். 

இந்த கோட்டத்தில் சீனியர் எம்பிக்கள் டிஆர் பாலு, ஜெகத்ரட்சகன், தயநிதிமாறன் உட்பட பலரும் குழுவில் உள்ளனர். இதில் சென்னை கோட்ட ரயில்வே நாடாளுமன்ற குழு தலைவர் பதவிக்கு ஜூனியரான  கதிர் ஆனந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் தான் தயாநிதி மாறன் அதிருப்தியில் இருக்கிறார். 

இன்னும் மக்களவை உறுப்பினராகவே பதவி ஏற்று கொள்ளாத, கதிர் ஆனந்த் முக்கிய பதவியை பெற்றிருப்பது தயாநிதி மாறனுக்கு அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த பதவியை தயாநிதிமாறன் எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் கதிர் ஆனந்த் அந்தப் பதவியை பெற்றதால் அவர் அதிருப்தியடைந்திருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மக்களவையிலும் கனிமொழிக்கு கூட திமுக துணை தலைவர் பதவி கிடைக்க, தயாநிதிமாறன் உறுப்பினராகவே ஏமாற்றமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

துரைமுருகன் ஏன் இப்படி செய்கிறார் என அனைவரும் தலைமையிடம் கேட்க, உதயநிதியை முன்னிறுத்தி கொண்டு வர வேண்டும் என்றால் இதையெல்லாம் அனுசரித்து தான் செல்ல வேண்டும் என பதில் கிடைக்கவே, மிகவும் நொந்து போயுள்ளாராம் தயாநிதி....


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dhyanithi maran upset when kathir aanath got new pot


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->