கட்சி பாகுபாடின்றி ஒன்று கூடிய தலைவர்கள்.! தினகரனின் அதிரடி பேச்சு.! - Seithipunal
Seithipunal


எஸ்டிபிஐ யின் முப்பெரும் விழா நேற்று சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இதில், பல்வேறு இயக்கத்தை சேர்ந்த தலைவர்களும் கலந்து கொண்டனர். இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அந்த உரையில், "எந்த ஒரு மதவாதமும் தமிழகத்தில் தலைதூக்காது. அதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இங்கு வாழும் அனைத்து சகோதர, சகோதரிகளும் ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டவர்களாக வாழ்கின்றனர். தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும் முன்னேற அமமுக துணிச்சலுடன் போராடும்" என அவர் தெரிவித்தார்.

Image result for velmurugan seithipunal

அதேபோல தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர், "வேல்முருகன் தமிழர்கள் தமிழகத்தின் பல்வேறு அரசுப் பணிகளுக்கு தேர்வாகவில்லை. சென்னிமலையில் அப்ரண்டீஸ் பணிக்கு ஆள் எடுக்கப்பட்ட போது ஒன்று கூடி நாங்கள் எதிர்குரல் கொடுத்து சிபிஐ விசாரணை கோரினோம்.

அதன் பிறகு அப்ரண்டிஸ் பயிற்சி பதிவு செய்திருந்தால் மட்டும் மற்றவர்கள் தேர்வு செய்யப்படுவர் என தெரிவித்தனர். அதேபோல பாடப் புத்தகத்தில் இந்துத்துவ கொள்கைகளைத் இணைக்க மத்திய அரசு முயன்று வருகிறது." என அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dhinakaran speech in sdpi meeting


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->