அதிமுக இனி ஒரு தொகுதியிலும் வெற்றிபெற இயலாது!! டிடிவி தினகரன் அதிரடி!!
dhinakaran says admk never can win in tamilnadu
தற்பொழுது தருமபுரியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் தினகரன் பாலக்கோட்டில் உரையாற்றி வருகினறார். ஏற்கனவே, நடக்கவிருந்த திருவாரூர் தேர்தல் நிறுத்தப்பட்ட நிலையில் தனது அடுத்த கட்ட நகர்வை நோக்கி தினகரன் கட்சியினர் நகர்வதாக தெரிகிறது.
இந்த உரையில் தினகரன் ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சித்து வருகின்றார். அமமுக சார்பில் நடக்கும் இந்த நிகழ்வில் டிடிவி தினகரன் "மக்களுக்கு எதிரான செயல்களை மட்டுமே அதிமுக செய்து வருகின்றது" என்றும்,
'அம்மா ஆட்சி என்று கூறிக்கொண்டு, அதிமுகவினர் மக்களை ஏமாற்றி வருகின்றனர். மக்களுக்கு உபயோகமான வகையில் ஒருத்திட்டததையும் கொண்டு வர அதிமுக அரசினால் முடியவில்லை. அவர்கள் கொண்டு வருவது அனைத்தும் மக்களுக்கு எதிரான திட்டங்கள் தான் என்றும்,
மேலும், காவல் துறையை ஏவல் துறையாக மாற்றிய பெருமையும் அதிமுக அரசையே சேரும். போலீசாரை கூலிப்படையாக நடத்தி வருகின்றனர். மக்கள் சக்தியின் முன்னால் பணத்தின் சக்தி ஒன்றும் செய்ய முடியாது என்றும்,
வரும் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக ஒரு தொகுதி கூட வெற்றி பெறாது. கடுமையான தோல்வியையே சந்திக்கும் என்றும் கூறிவருகின்றார். புதிதாக உருவாக்கப்பட்ட அமமுக கட்சியின் பொது செயலாளர், தமிழகத்தின் பழம்பெரும் கட்சியான அதிமுக, திமுகவை தொடர்ந்து எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
English Summary
dhinakaran says admk never can win in tamilnadu