ஏழை-எளிய, ஆதரவற்ற மக்களுக்கு தினமும் உணவளித்து பசியாற்றும் தருமபுரி பாமக எம்.எல்.ஏ..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக மே 24 முதல் மே 31 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பணியாளர்கள், பத்திரிக்கைத்துறையினர் மற்றும் வேளாண் பணிகள் மற்றும் அது சார்ந்த தொழிற்சாலைகள் என சிலருக்கு மட்டும் கட்டுப்பாடுடன் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

ஊரடங்கு காலங்களில் மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டு வந்தாலும், தினமும் ஆதரவின்றி கிடைத்த வேலை செய்து வரும் பலரும் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். ஆதரவற்றோருக்கு அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போன்று பலரும் உதவி செய்து வருகின்றனர். 

இந்நிலையில், தர்மபுரி பாமக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் தளர்வுகளுடன் கூடிய கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாட்களில் இருந்து தினமும் ஆதரவற்ற மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு தன்னால் இயன்ற உதவியை தொடர்ந்து செய்து வருகிறார். தற்போது, தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலிலும், தருமபுரி சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் ஆதரவற்றோரை நேரில் சந்தித்து உணவு பொருட்களை வழங்கி வருகிறார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dharmapuri PMK MLA Vengadeswaran Help Poor Peoples During Lockdown to Give food 24 May 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->