காவல்நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து.. அடுத்த சிக்கலில் தருமபுரி காவல்துறை.!! - Seithipunal
Seithipunal


தருமபுரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலை பகுதியை சார்ந்த விவசாயி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இது குறித்த மனுவில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஒருசார்பாக செயல்பட்டு, கட்டப்பஞ்சாயத்து செய்து மக்களை துன்புறுத்தி வருவதாக அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார். 

இது குறித்த மனுவை விசாரணைக்கு ஏற்று, குற்றம் இழைக்கும் அதிகாரிக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஏற்றுக்கொள்ளப்பட்டு, சென்னை நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. 

மேலும், கட்டப்பஞ்சாயத்து புகார் தொடர்பாக தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை காவல்நிலைய உதவி ஆய்வாளர் மீது வந்துள்ள குற்றசாட்டை பரிசீலித்து, தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், இந்த விசாரணையை சேலம் சரக டி.ஐ.ஜி மற்றும் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்கொள்ள வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dharmapuri Perumparai Police officers under investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->