9 ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. கணித ஆசிரியர் பெயரில் காமுகன்.. தர்மபுரியில் பரபரப்பு.!
Dharmapuri Pennagaram School girl Sexual abuse by Maths Teacher Govindhan 22 April 2021
ஒன்பதாம் வகுப்பு மாணவியை புத்தகம் வாங்க அழைத்து காமுக ஆசிரியன் அத்துமீறிய கொடூர சம்பவம் நடந்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் இண்டூர் கோழிக்கொட்டாய் பகுதியை சார்ந்தவன் அரசு பள்ளி கணித ஆசிரியன் கோவிந்தன். இவன் அங்குள்ள இண்டூர் அரசு உயர்நிலை பள்ளியில் ஆசிரியர் என்ற பொறுப்பில் பணியாற்றி வருகிறான்.
இந்த காமுகன் பள்ளியில் பயின்று வந்த 9 ஆம் வகுப்பு மாணவியை பள்ளிக்கு வந்து புத்தகம் வாங்கிக்கொள்ளுமாறு அழைத்துள்ளான். இவனது பேச்சில் உள்ள விபரீதத்தை புரிந்துகொள்ளாத சிறுமி தனியாக வந்து புத்தகம் வாங்கி செல்ல முடிவெடுத்துள்ளார்.
பள்ளிக்கு சிறுமி தனியாக வந்த நிலையில், காமுக கொடூரன் சிறுமியை பள்ளியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறான். காமுகனின் பிடியில் இருந்து தப்பிக்க இயலாத சிறுமி, வீட்டிற்கு அழுதபடி சென்று விஷயத்தை கூறியுள்ளார்.
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் அங்குள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் காமுகன் கோவிந்தனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Dharmapuri Pennagaram School girl Sexual abuse by Maths Teacher Govindhan 22 April 2021