திமுகவில் இருந்து விலகிய நிர்வாகிகள், ஜி.கே மணி முன்னிலையில் பாமகவில் இணைவு.!
Dharmapuri Pappireddipatti DMK Supporters Leave DMK Party and Join PMK Party In front of GK Mani
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில், திராவிட முன்னேற்ற கழகத்தை சார்ந்த நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி, தங்களை பாட்டாளி மக்கள் கட்சியில் இணைத்துக்கொண்டனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பகுதியில் உள்ள கிராமங்களை சார்ந்த திமுக நிர்வாகிகள் 25 க்கும் மேற்பட்டோர், திமுகவில் இருந்து விலகி தங்களை பாட்டாளி மக்கள் கட்சியில் இணைத்துக்கொண்டனர்.
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள தோழனூர் பிரபாகரன், அதிகாரப்பட்டி சேகர், ஜீவாநகர் ஆனந்தன் உட்பட 25 க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள், தங்களை பாட்டாளி மக்கள் கட்சியில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே மணி முன்னிலையில் இணைத்துக்கொண்டனர்.
தற்போது நடைபெற்று வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்கு வாக்கு சேகரிக்க பாமக தலைவர் ஜி.கே மணி உட்பட நிர்வாகிகள், கடந்த சில நாட்களாகவே தர்மபுரி மாவட்டத்தில் தொடர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த நிலையில், திமுகவில் இருந்து விலகி அக்கட்சியை சார்ந்த நிர்வாகிகள் தங்களை பாமகவில் இணைத்துக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க : தர்மபுரி பாமக - அதிமுக கோட்டை தான்.. தோல்வியை ஒப்புக்கொண்ட திமுக எம்.பி மருத்துவர் செந்தில்குமார்.!
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Dharmapuri Pappireddipatti DMK Supporters Leave DMK Party and Join PMK Party In front of GK Mani