காதலுக்கு பெற்றோர்கள் பச்சைக்கொடி காட்டியும், காதல் ஜோடியின் விபரீத முடிவு.. தருமபுரியில் சோகம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் மோப்பிரிப்பட்டி பகுதியை சார்ந்தவர் சவுரிநாதன். இவரது மகளின் பெயர் சோபியா (வயது 21). இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் இறுதி வருடம் பயின்று வந்துள்ளார். இதே பகுதியில் வசித்து வருபவர் ராஜா. இவரது மகன் ஆனந்தராஜ் (வயது 22). இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆவார்கள். 

சோபியாவிற்கும், ஆனந்தராஜிற்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரியவந்துள்ளது. இருவரும் நெருங்கிய சொந்தம் என்பதால், இருதரப்பு பெற்றோர்களும் திருமணத்திற்கு பரிபூரண சம்மதம் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில், நேற்று காலை அரூர் அரசு மருத்துவமனைக்கு பின்னால் இருக்கும் காட்டுப்பகுதியில் ஆனந்தராஜ் மற்றும் சோபியாவின் சடலம் இருந்துள்ளது. இவர்கள் இருவரும் விஷம் அருந்திய நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், இது குறித்து காவல் துறையினர் மற்றும் இருவரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், இவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள துவங்கினர். மேலும், இருவீட்டாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து, காதல் ஜோடிகள் எதற்காக? தற்கொலை முடிவு செய்தது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dharmapuri love couple commit suicide died police investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->