தொப்பூர் கணவாயில் அடுத்த சோகம்.. அரங்கேறிய கோர விபத்து.. உடல்நசுங்கி பலியான உயிர்கள்.!! - Seithipunal
Seithipunal


தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிவாடியில் இருந்து இரயில்வேல் இரும்பு பாலத்தை ஏற்றுக்கொண்ட லாரியொன்று திருச்சியை நோக்கி பயணம் செய்து கொண்டு இருந்தது. இந்த லாரி தொப்பூர் கணவாய் ஆஞ்சிநேயர் கோவில் வளைவு பகுதியில் கட்டுப்பாட்டினை இழந்து இருக்கிறது. 

இதனால், முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில், லாரி ஓட்டுநர் செல்வம் (வயது 50), கிளீனர் தங்கராஜ் (வயது 55), இருசக்கர வாகனத்தில் சென்ற சின்னவன் (வயது 55), ஆரியா கவுண்டர் (வயது 53) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகியுள்ளனர். 

இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dharmapuri Lorry accident 4 men died


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->