காதல் வலியில் கதறிய சிறுமி.. திருமணத்திற்கு குஜாலாக ரெடியான காமுகன்..!!
Dharmapuri girl sexual abuse police arrest culprit
தமிழகத்தின் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள கிராமத்தை சார்ந்த 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுமியின் உறவினர் சவுந்தர் (வயது 26).
சவுந்தர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில், சிறுமியை காதலிப்பதாக கூறியுள்ளான். காதல் வலையில் விழுந்த சிறுமியை காமுகன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறான்.
இந்த நிலையில், அவனுக்கு மணமுடிக்க மற்றொரு பெண்ணை பார்த்து வந்ததாக தெரியவருகிறது. இந்த விஷயம் குறித்து அறிந்த சிறுமி, தனது பெற்றோரிடம் விஷயத்தை தெரிவித்துள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்த புகாரை பெற்ற அரூர் மகளிர் காவல் நிலைய அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டு சவுந்தரை கைது செய்தனர். அவனிடம் மேற்கொண்ட விசாரணையில், சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டுள்ளான். இதனையடுத்து காமுகனை காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Dharmapuri girl sexual abuse police arrest culprit