மனைவி தாய் வீட்டில் இருக்கையில், மகளுக்கு பெற்றெடுத்த தந்தை செய்த கொடூரம்..! - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் பேகரஅள்ளி தொன்னையன் கொட்டாய் கிராமத்தை சார்ந்தவர் சண்முகம் (வயது 37). இவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி (வயது 28). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். 

கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், தகராறு ஏற்படும் போதெல்லாம் இரண்டு மகள்களையும் வீட்டிலேயே விட்டுவிட்டு, காவேரிப்பட்டினத்தில் இருக்கும் தாயாரின் இல்லத்திற்கு தனலட்சுமி செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். 

பின்னர் கோபம் தணிந்தவுடன் கணவரின் இல்லத்திற்கே மீண்டும் திரும்பிய நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்னதாக வழக்கம்போல சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த தனலட்சுமி தாயாரின் இல்லத்திற்கு சென்றுள்ளார்.

தற்போது சமீபத்தில் மீண்டும் வீட்டிற்கு திரும்பிய நிலையில், 10 வயது மகள் தந்தையால் நேர்ந்த கொடூரத்தை தாயிடம் கலங்கியபடி கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்மணி, இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்த விசாரணையில், சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காமுக கொடூரனை காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dharmapuri Father Sexual abuse 10 year child police arrest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->