பூஜை செய்ய வேண்டுமென கூறிவிட்டு.. ஆபாச படத்தை அனுப்பிய போலி சாமியார்.!  - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் அருகே வள்ளுவபுரத்தைச் சேர்ந்த மனோகரன் மற்றும் மனைவி லட்சுமி இருவரும் வசித்து வந்துள்ளனர். கடந்த வம்பர் 19ஆம் தேதி வேலூர் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த சின்னதுரை என்ற 40 வயது சாமியார் இவர்களது வீட்டிற்கு வந்துள்ளார். 

அப்போது வீட்டிற்கு பின்புறம் செய்வினை இருப்பதாகவும்,  அதை நீக்க பூஜை செய்ய வேண்டும் என்றும் சின்னதுரை கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, பூஜை பொருட்கள் வாங்க மனோகரன் சின்னதுரை அழைத்துக்கொண்டு சென்றார். 

அப்போது தன்னை போலீசில் பிடித்துக் கொடுக்க அழைத்துச் செல்கிறார்கள் என்று நினைத்த சின்னதுரை பைக்கில் இருந்து தப்பித்து ஓடியுள்ளார். அதன் பின் சாமியார் சின்னதுரைக்கு கால் செய்து ஏன் பூஜை செய்ய வரவில்லை என்று மனோகரன் கேட்டுள்ளார். 

இதற்கு சின்னதுரை தகாத வார்த்தைகளால் தீட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதன் பின், மனோகரன் மகளுக்கு ஒரு ஆபாச படத்தை சின்னதுரை அனுப்பியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மனோகரன் உடனே போலீசில் புகார் கொடுக்க அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சின்னதுரையை கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dharmapuri fake samiyar arrested


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->