16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. கர்ப்பிணியானதால் கருக்கலைப்பு.. காமுகனின் வெறிச்செயலால் மருத்துவமனையில் சிகிச்சை.!
Dharmapuri Culprit Sakthi Aged 23 Sexual Abuse 16 Aged Girl and Abortion Police Investigation
தர்மபுரி மாவட்டத்தை சார்ந்தவர் சக்தி (வயது 23). இவர் ஈரோட்டில் உள்ள அணைக்கட்டு சாலை, கோழிக்கடை பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள ரப்பர் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவருக்கு ஈரோட்டை சார்ந்த 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சிறுமியிடம் ஆசையாக காதல் மொழி பேசிய காமுகன், அவரை காதல் வலையில் வீழ்த்தியிருக்கிறான். மேலும், அவரிடம் திருமண ஆசை கூறி பாலியல் பலாத்காரமும் செய்துள்ளான். இதனால் சிறுமி கர்ப்பமாகியுள்ளார்.
இதனை காதலரிடம் தெரிவிக்கவே, அவர் மாத்திரையை வாங்கிக்கொடுத்து சிறுமியின் கருவை கலைத்திருக்கிறார். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமி, சிகிச்சைக்காக தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் பெற்றோர்களிடம் விஷயத்தை மருத்துவர்கள் கூறவே, அவர்கள் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து சக்தியை கைது செய்து சிறையில் அடித்தனர்.
English Summary
Dharmapuri Culprit Sakthi Aged 23 Sexual Abuse 16 Aged Girl and Abortion Police Investigation