வயலில் பாய்ந்த லாரி... சமையல் எண்ணெயால் நிரம்பிய வயல்வெளி.. குடத்தோடு வந்த மக்கள்.! - Seithipunal
Seithipunal


விபத்தில் கவிழ்ந்து போன எண்ணெயை லாரியில் இருந்து அருவி நீர் போல கொட்டிய சமையல் எண்ணெயை மக்கள் குடங்களில் வந்து அள்ளிச்சென்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. 

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காடுசெட்டிப்பட்டி பகுதியில், ஓசூரில் இருந்து சமையல் எண்ணெய் ஏற்றிக்கொண்ட லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்து, விபத்துக்குள்ளாகியதில் தாழ்வாக இருந்த விவசாய நிலத்தில் கவிழ்ந்து கிடந்தது. 

இதனால் லாரியில் இருந்த சமையல் எண்ணெய் வயலில் கொட்டியுள்ளது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் வீடுகளில் உள்ள குடத்தோடு வந்து எண்ணெயை பிடித்து சென்றனர். இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், லாரியில் இருந்த என்னை முழுவதுமாக விவசாய நிலத்தில் கொட்டி விவசாய நிலம் பாழடைந்தது. 

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் லாரியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், லேசான காயமடைந்து இருந்த ஓட்டுனரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dharmapuri Cooking Oil Tanker Truck Accident


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->