அதிமுக பிரமுகரை கண்டித்து, திமுக பெண் ஊராட்சி மன்ற தலைவர் தர்ணா.! - Seithipunal
Seithipunal


தருமபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் கும்பாரஹள்ளி ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருபவர் கௌரி திருக்குமரன். இவர் திமுகவை சார்ந்தவர் ஆவார். இவருக்கும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான லட்சுமியின் கணவர் மாது என்பவருக்கும் இடையே ஊராட்சி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. 

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமியின் கணவர் மாது அதிமுகவை சார்ந்தவர் ஆவார். இந்நிலையில், கொல்லப்பட்டு கிராமத்தில் ரூ.2.11 இலட்சம் மதிப்பில் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அங்கு ஊராட்சி மன்ற தலைவர் கௌரி திருக்குமரன் பூமி பூஜை செய்ய வந்துள்ளார். 

இதன்போது, அங்கு வந்த அதிமுக பிரமுகர் மாது, பூமி பூஜை ஏற்கனவே நடைபெற்றுவிட்டது என வாக்குவாதம் செய்துள்ளார். மேலும், மாது பெண் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த கௌரி திருக்குமரன், அதிமுக பிரமுகரை கண்டித்து தர்ணா போராட்டம் நடத்தினர். 

இந்த விஷயம் தொடர்பான தகவல் காரிமங்கலம் தாசில்தார், பாலக்கோடு துணை காவல் கண்காணிப்பாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் காவல் துறையினருக்கு தெரியவரவே, அனைவரும் சம்பவ இடத்திற்கு விரைந்து பேசுவபார்த்தையில் ஈடுபட்டனர். இந்த விஷயம் தொடர்பாக புகாரை வாங்கிவிட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து, கௌரி தனது போராட்டத்தை முடிவு செய்து பூமிபூஜை செய்து அங்கிருந்து சென்றார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dharmapuri AIADMK DMK Supporters Issue Police Solve It 14 July 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->