#தமிழகம் || நாடக காதலனுடன் ஓடிய சிறுமி : போலீஸ் தேடுவதை அறிந்து காவல்நிலைய வாசலில் விட்டுவிட்டு நாடக காதலன் தப்பி ஓட்டம்.! - Seithipunal
Seithipunal


தேவகோட்டை அருகே காதலனுடன் மகள் ஓடி விட்டு, பின்னர் வீடு திரும்பிய நிலையில், பக்கத்து வீட்டார் ஏளனம் பேசியதால், தாய் தற்கொலை தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே 17 வயது சிறுமி ஒருவர் காரைக்குடியில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். தன்னுடன் படிக்கும் முதலாமாண்டு மாணவருடன் மாணவி பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அவருடன் காதல் வயப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில், கல்லூரிக்கு சென்ற மாணவி திடீரென மாயமாகிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தேவகோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வந்த நிலையில், மாணவியை தேடுவதை அறிந்த காதலன், தேவகோட்டை காவல் நிலையம் அருகே மாணவியை கொண்டு வந்து விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதனையடுத்து மாணவியை வீட்டுக்கு அழைத்து வந்து உள்ளனர். இருப்பினும் மாணவி இதுபோன்ற செய்த செயல் பெற்றோருக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி இருந்தது.

ஏற்கனவே மனம் நொந்து இருந்த மாணவியின் தாயிடம், 'மகளை ஒழுங்காக வளர்க்க தெரியாதா?' என்று பக்கத்து வீட்டார் ஏளனமாக பேசியுள்ளனர். 

இதனால் மாணவியின் தாய் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

devakottai 17 years old girl escaped with lover


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->