வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு... வேட்புமனுத்தாக்கல் செய்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.!
Deputy Chief Minister O Panneer Selvam filed the nomination TN Election 2021 Bodinayakkanur Constituency
போடி தொகுதியில் போட்டியிட தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தனது வேட்புமனுவை போடி தாலுகா அலுவலகத்தில் தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு, மார்ச் மாதம் 12 ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 19 ஆம் தேதி வரை வேட்புமனுத்தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகத்தில் வேட்புமனுத்தாக்கல் செய்யலாம்.
அதிமுக சார்பில் தமிழக முதல்வர் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, எடப்பாடி தொகுதியில் களம்காண்கிறார். தமிழக துணை முதல்வர் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் போடி தொகுதியில் களம்காண்கிறார்.
இந்நிலையில், தமிழக துணை முதல்வர் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக வேட்பாளராக போடி தொகுதியில் போட்டியிட மனுதாக்கல் செய்தார். முன்னதாக அங்குள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, மக்களிடம் வாக்குகளை சேகரித்தபடி வந்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது வேட்பாளருக்கான மனுதாக்கல் செய்தார்.
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தாலுகா அலுவலகத்திற்கு வருகையில், வழிநெடுகிலும் அவருக்கு மக்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Tamil online news Today News in Tamil
English Summary
Deputy Chief Minister O Panneer Selvam filed the nomination TN Election 2021 Bodinayakkanur Constituency