வருகின்ற 12ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் ஆர்பார்ட்டம்... நாம் தமிழர் கட்சி அறிவிப்பு..!
Demonstration in Valluvar Kottam on the 12th
வருகின்ற 12ம் தேதி ஆர்பார்ட்டம் நடைபெறும் நாம் கட்சி அறிவித்துள்ளது.
ஆளும் திமுக அரசை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் வருகின்ற 12ம் தேதி வள்ளூவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தெரிவிக்கப்படுள்ளதாவது,
20 ஆண்டுகளுக்கும் மேலாக கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் இஸ்லாமிய சிறைவாசிகளை மதத்தினை காரணமாக காட்டி விடுதலை செய்ய முடியாது என அரசாணை வெளியிட்டுள்ள தி.மு.க. அரசின் மதவாதப்போக்கை கண்டித்தும்,
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு 30 ஆண்டுகளாக சிறைக் கொட்டடியில் வாடும் 7 தமிழர்களையும் விடுதலை செய்ய 161-வது சட்டப்பிரிவின்படி மாநில அரசுக்கே அதிகாரமிருக்கும்போது ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி மாநிலத் தன்னுரிமையையும், தன்னாட்சியையும் காவு கொடுத்திருக்கும் தி.மு.க. அரசின் வஞ்சகப் போக்கை கண்டித்தும் வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கின்றது.
இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாநில, மாவட்ட, தொகுதி, நகரம், வட்டம், ஒன்றியம் உள்ளிட்ட அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும், அனைத்து பாசறைகளின் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாக பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
English Summary
Demonstration in Valluvar Kottam on the 12th