தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்.!
delta districts announced has protected district for agriculture
காவேரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் தலைவாசலில் சர்வதேச கால்நடை ஆராய்ச்சி பூங்கா அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டார்.
தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இனி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை தமிழக அரசு அனுமதிக்காது என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். காவேரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற டெல்டா மாவட்ட விவசாய பெருங்குடி மக்களின் நீண்ட கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.
English Summary
delta districts announced has protected district for agriculture