பிறந்து 5 நாட்களான ஆண் குழந்தை மரணம்... காவல்துறை தீவிர விசாரணை...!
Death of a 5-day-old baby boy
பிறந்து ஐந்து நாட்கள் ஆன ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம், தின்னஅள்ளி பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (30). இவருக்கு திருமணமாகி யோகப்பிரியா (20) என்ற மனைவி இருக்கிறார். கர்ப்பமாக இருந்த யோகப்பிரியாவிற்கு கடந்த 5 நாட்களுக்கு முன் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் , அதிர்ச்சியடைந்த அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுபி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிறந்து 5 நாட்களான ஆண் குழந்தை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Death of a 5-day-old baby boy