வகுப்பறையிலேயே ஆசிரியரின் மோசமான செயல்.! தாங்கிக்கொள்ள முடியாமல் உயிரைவிட்ட மாணவன்.!  - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி, அருகே மேலைச்சிவபுரி சேர்ந்த சொக்களிங்கம் என்பவருக்குப் 18 வயது மகன் கார்த்திக் என்பவர் இருக்கின்றார். இவர் அங்கே இருக்கும் கல்லூரி ஒன்றில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

அதே கல்லூரியில் வணிகவியல் துறையில் பேராசிரியராக இருக்கும் துறைபாண்டி என்பவர் மாணவனை வகுப்பறையில் வைத்து மற்ற மாணவர்கள் முன்னிலையில், அவதூறாக திட்டியுள்ளார். இதன் காரணமாக கார்த்திக் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்.

suicide, seithipunal

எனவே அந்த அவமானத்தை தாங்கிக் கொள்ள முடியாத கார்த்திக் எலி மருந்தை எடுத்து சாப்பிட்டுள்ளார். உயிருக்கு போராடிய நிலையில் கார்த்திகை அவரது வீட்டினர் மீட்டு புதுக்கோட்டையில் இருக்கும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

ஆனால் சிகிச்சையில் இருந்த கார்த்திக் நேற்று இரவு உயிரிழந்துள்ளார். இதுகுறித்து பொன்னமராவதி காவல்துறையினரிடம் கார்த்திக்கின் தாய் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர் பேராசிரியர் திட்டியதற்காக தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கின்றதா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

death in pudukottai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->