பெற்றது ஆறு., ஒன்னு கூட இல்ல... வீட்டிலே அழுகி கிடந்த பெண்.! கோவையில் பரபரப்பு.!
death in kovai singanallur
கோயம்புத்தூர் சிங்காநல்லூர் அருகே ஆறுமுகம் நகரை சேர்ந்த பழனியப்பன் என்பவருக்கு கற்பகம் (வயது 84) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு மூன்று மகன்கள் மகள்கள் இருந்துள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி வேறு இடங்களில் வசித்து வந்துள்ளனர்.
சில வருடங்களுக்கு முன்னதாகவே பழனியப்பன் இறந்துவிட்டார். கற்பகம் மட்டும் தனித்து வசித்து வந்துள்ளார். சாய்பாபா காலனியில் வசித்து வரும் சுந்தர்ராஜ் என்ற மகன் வீட்டிற்கு அடிக்கடி வந்து கற்பகம் வந்து பார்த்துவிட்டுச் செல்வார். இன்னிலையில், தாயை பார்ப்பதற்காக சுந்தர்ராஜ் வந்துள்ளார்.
அப்போது வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்தது கதவை தட்டி பார்த்த பின்னரும் திறக்கவில்லை. அதன் பின்னர் சன்னல் கதவை திறந்து பார்த்தார்.அப்போது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதன் காரணமாக சந்தேகமடைந்த அவர் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
காவல்துறையினர் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது கற்பகம் கட்டிலில் இறந்து கிடந்துள்ளார். அவர் இறந்து மூன்று நாட்களுக்கு மேல் இருக்கும் என தெரிகிறது. எனவே, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
English Summary
death in kovai singanallur