தாய் கண்டித்ததால் மகள் எடுத்த விபரீதம் முடிவு.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தாய் கண்டித்ததால் மகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திம்மனந்தல் பகுதியை சேர்ந்தவர் காவியா(20). இவர் வீட்டில் வேலையை செய்யாமல் இருந்ததால், இதனை அவரது தாய் கண்டித்துள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த காவியா தற்கொலை செய்து கொள்வதற்காக விஷம் குடித்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக காவியாவை மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு கொண்டு செல்லப்பட்ட காவியா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சங்கராபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பு:

[ உங்களுக்கு தற்கொலை எண்ணம் தோன்றினால் உடனே அழையுங்கள் : 

மாநில சுகாதார துறை தற்கொலை தடுப்பு உதவி எண் - 104

சினேஹா தற்கொலை தடுப்பு மையம் - 044-24640050 

உங்களின் தோழன், தோழியாக பரிவுடன் பேச தயார். உங்கள் தனிப்பட்ட விவரம் வெளியிடப்படாது. பயமின்றி அழையுங்கள். புது வாழ்வை நம்பிக்கையுடன் தொடங்குங்கள்]


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Daughter suicide in kallakurichi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->