23 வயது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி... வாக்குமூலத்தில் பகீர்.!!
Darmapuri illegal affair murder police investigation
தமிழகத்தின் தருமபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலத்தை அடுத்துள்ள திண்டல் பிச்சினூர் கிராமத்தை சார்ந்தவர் மாரியப்பன் (வயது 32). இவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வரும் நிலையில், இவரது மனைவியின் பெயர் நதியா (வயது 27). இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில், ஊரடங்கால் மாரியப்பன் வீட்டில் இருந்துள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக வழக்கம்போல தனது அறைக்கு தூங்க சென்ற மாரியப்பன், மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இந்த விஷயம் குறித்த காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், மாறியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விஷயம் குறித்த வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், நதியாவிற்கும், இதே பகுதியை சார்ந்த முரளிக்கும் (வயது 23) பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது பின்னாளில் கள்ளக்காதலாக மாறவே, அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
இந்த கள்ளக்காதல் விஷயம் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மாரியப்பனிற்கு தெரியவந்ததை அடுத்து, முரளி மற்றும் மாரியப்பனிற்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு இருவருக்கும் கைகலப்பாகவும் மாறியுள்ளது. இதன்பின்னர் கணவரை கொலை செய்ய நடந்த திட்டப்படி, தூங்கிக்கொண்டு இருந்த மாரியப்பனை கள்ளக்காதல் ஜோடிகள் சேர்ந்து கொலை செய்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இருவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Darmapuri illegal affair murder police investigation