சி வி சண்முகம் என்ன சொன்னார் தெரியுமா?.!
CV Shanmugam Answer
தனது கருத்து திரித்து கூறப்பட்டுள்ளதாக முன்னாள் அதிமுக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் பதில் தெரிவித்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் விழுப்புரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டத்துறை அமைச்சாராக நியமிக்கப்பட்டவர் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் அவர்கள். இவர் கடந்த 06 ஆம் தேதி விழுப்புரம் - வானூர் ஒன்றிய அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உள்ளாட்சித் தேர்தல் தொடர்பானக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
அப்போது, அந்தக்கூட்டத்தில் பேசிய சி.வி சண்முகம், நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்ததால் சிறுபான்மையினர் ஓட்டு நமக்கு கிடைக்கவில்லை. நம்முடைய ஆட்சி மீதெல்லாம் மக்களுக்கு எவ்வித கோபமும் இல்லை.
எனவே, பாஜக வுடன் கூட்டணி வைத்ததே நமது தோல்விக்கு காரணம் என பேசியிருந்தார். இதற்கு பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் வானூர் கூட்டத்தில் பேசிய தனது கருத்துக்கு பதிலளித்துள்ள முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், ‘தனது கருத்து நாளிதழ்களில் திரித்து கூறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.