சாப்பிட வந்த நபரிடம், முதலாளி செய்த காரியம்.! சர்வரை பதம்பார்த்த சர்வாதிகாரி கஸ்டமர்.! - Seithipunal
Seithipunal


மதுரை அருகே வாடிக்கையாளர் ஒருவர் ஒரு ஹோட்டலில் சாப்பிட வந்துள்ளார். அப்போது ஆர்டர் எடுக்க வந்த சர்வரிடம் தனக்கு சிக்கன் 65 வேண்டும் என்று கேட்டுள்ளார். இலையை போட்டு தண்ணீர் வைத்து விட்டு சிக்கன் 65 யை ஆர்டர் கொடுக்க சர்வர் உள்ளே சென்றுள்ளார். 

அப்போது அவரை அழைத்த முதலாளி, "அவர் ஏற்கனவே நிறைய கடன் வைத்துள்ளார். எனவே அவருக்கு எந்த உணவும் கொடுக்கக்கூடாது இலையை எடுத்து விட்டு அவரை வெளியே அனுப்பு." என்று தெரிவித்துள்ளார். 

இதன் காரணமாக சர்வர் வந்து போட்ட இலையை எடுத்து இருக்கின்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் ஏன் என்று கேட்ட பொழுது முதலாளியின் உத்தரவு என்று தெரிவித்துள்ளார்.

எனவே கோபமடைந்த அந்த கஸ்டமர் சர்வரின் மண்டையை உடைத்து இருக்கின்றார். இதில் ரத்தம் சொட்ட, சொட்ட சர்வர் மயங்கி விழ அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்ததால் அந்த சர்வாதிகாரி கஸ்டமரை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

customer attack server in madurai hotel


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->