தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள்.. தமிழக அரசு அறிவிப்பு.!
curfew extension in tn govt
தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஊரடங்கு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்.
தடை செய்யப்பட்ட பகுதி தவிர பிற பகுதிகளில் ஒரு மாதத்திற்கான வழிகாட்டுதல்கள் அறிவித்துள்ளனர். தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும்.
இந்நிலையில், தமிழகத்தில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்றுடன் 4வது கட்ட ஊரடங்கு நிறைவடையும் நிலையில் அறிவித்துள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பின் படி ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வுகளுடன் நீட்டிப்பு. வழிபாட்டு தலங்களுக்கான தடை தொடரும். அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கான தடை தொடரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
டீக்கடை, உணவகங்களில் 8ம் தேதி முதல் உட்கார்ந்து சாப்பிட அனுமதி.
நாளை முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 முதல் இரவு 8 மணி வரை இயங்கும்.
உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
5 பேருக்கு மேல் ஒரு கடையில் கூடக் கூடாது.
வாடகை மற்றும் டாக்சி வாகனங்கள் ஓட்டுநர் தவிர்த்து 3 பயணிகளுடன் இயங்க அனுமதி.
ஆட்டோக்களில் 2 பயணிகள் பயணிக்க அனுமதி.
சென்னையில் ஐ.டி. நிறுவனங்கள் அதிகபட்சமாக 40 நபர்களுடன் செயல்பட அனுமதி.
சென்னையில் அனைத்து தனியார் நிறுவனங்களும் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.
வணிக வளாகங்கள் தவிர அனைத்து ஷோரூம்களும் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.
ஒரே நேரத்தில் 5 வாடிக்கையாளர்கள் மேல் இருக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
சென்னையில் 8ம் தேதி முதல் ஓட்டல், டீக்கடைகளில் உட்கார்ந்து சாப்பிட அனுமதி.
சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு ரூ. 2,500 வழங்கப்படும் என தமிழக ராசு தெரிவித்துள்ளது.
English Summary
curfew extension in tn govt