முழு ஊரடங்கு நீட்டிப்பு.. மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை நீட்டிப்பு.!! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸின் தாக்கமானது தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கும் நபர்களுக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. மேலும், கொரோனா தொடர்ந்து பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கையும் எடுத்து வருகிறது.

தமிழகத்தில் நேற்றுவரை கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1,885 ஆக இருந்தது. சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியான நபர்களின் எண்ணிக்கை 24 ஆக இருந்தது. 1,020 பேர் பூரண நலன் பெற்று இல்லங்களுக்கு திரும்பியிருந்தனர்.

நேற்று மட்டும் 52 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 1101 பேர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தமிழகத்தில் இதுவரை 24 பேர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 809 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பெரம்பலூர் நகராட்சியில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை பெரம்பலூர் நகராட்சியில் முழு ஊரடங்கு நீட்டிப்பு. பெரம்பலூர் நகராட்சி சார்பில் 54 வாகனங்களில் காய்கறிகளை விற்க ஏற்பாடு செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

curfew extension in perambalur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->