ஆதார் எண்ணால் எக்குத்தப்பாக சிக்கி கொண்ட குற்றவாளி.! மண்டை மேல் இருந்த கொண்டையை மறந்த கதை!!! - Seithipunal
Seithipunal


கடந்த ஆறு மாத காலமாக திருச்சியில் தலைமறைவாக இருந்த ஒருவரை, தனது ஆதார் என்னுடன் இணைத்து இருந்த செல்போனில் அவர் ஏடிஎம்மில் பணம் எடுத்த பொழுது சிக்கிக் கொண்டுள்ளார்.

திருப்பட்டூர் அருகே உள்ள வேங்கை பகுதியைச் சேர்ந்த நிர்மலா என்பவர் காட்டூர் அருகே அமைந்துள்ள தனியார் கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார். அவரது கல்லூரியில் பணியாற்றும் ஒரு பேராசிரியர் உடன் இணைந்து இருந்ததால் அலுவலக ஊழியரான சந்தோஷ் கண்ணன் அவர்களை சரமாரியாக வார்த்தைகளால் தாக்கி தாக்கியதாக கூறி புகார் அளித்திருந்தார்.

ஆனால் காவல்துறையினர் இது குறித்து எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் 2018 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதியில் நீதிமன்றத்தை நாடி புகார் மனு அளித்துள்ளார். இந்த நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி திருவரம்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சந்தோஷ் கண்ணனை தேடி வந்துள்ளனர்.

சந்தோஷ் கண்ணன் தலைமறைவாக இருந்ததால், அவரை கண்டு பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சந்தோஷ் கண்ணனின் மனைவி செல்போன் நம்பரை தனது ஆதார் கார்டுடன் இணைத்து இருந்துள்ளார். அவர் வங்கியிலிருந்து பணத்தை எடுத்ததும் காவல்துறையினர் அவர் எங்கிருக்கிறார் என்பதை கண்டுபிடித்து சந்தோஷ் கண்னணை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

culprit arrested finding with adhar card


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->