அம்மாக்கூட என்னடி பேச்சு.? கடுப்பேற்றிய மாமியார்.. பழிவாங்க பகீர் செயலில் இறங்கிய மருமகள்.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பெரிய நற்குணம் என்ற கிராமத்தில் சிந்தாமணி என்ற 65 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவரது இளைய மகன் வேல்முருகன். வேல்முருகனுக்கு 15 வருடங்களுக்கு முன் சங்கீதா என்ற பெண்ணுடன் திருமணம் ஆகியது. 

சங்கீதா தனது தாய் பொற்கொடியிடம் அதிக நேரம் செல்போனில் பேசி வருவாராம். ஆனால், இது மாமியார் சிந்தாமணிக்கு பிடிப்பதில்லை. பிறந்த வீட்டு தொடர்பை வைத்துக் கொள்வதிலும், அவர்கள் தாயுடன் அதிகம் பேசுவதும் மாமியாருக்கு பிடிக்காமல் போனதால் அடிக்கடி இடையூறு செய்து கொண்டே இருந்துள்ளார்.

மேலும் மருமகளை அதிகப்படியாக கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள நினைத்து எப்போதும் ஏதாவது பிரச்சனை கொடுத்துக் கொண்டே இருந்தாராம்.

சங்கீதா தனது தாயிடம் செல்போனில் பேசுவதை தவிர்க்க நினைத்து, வேல்முருகனிடம் சென்று உன் மனைவி யாருடனோ அடிக்கடி போன் பேசுகிறார் என்று பற்ற வைத்துள்ளார்.

இதனால், கணவன் மனைவிக்கு இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. இதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியாது என்று எண்ணிய சங்கீதா அவர் தங்களது வீட்டிற்கு வந்தபோது கதவை சாத்தி தாழிட்டுவிட்டு பெட்ரோலை ஊற்றி உயிருடன் தீ வைத்து எரித்துள்ளார். அப்பொழுது சிந்தாமணி அலறி அடித்ததால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 

பின் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் விரைந்து வந்து சங்கீதாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore women Fired daughter In law


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->