ரஜினியின் அந்த ஒரு டயலாக்.. எடப்பாடி குறித்து சரமாரி விமர்சனம்.. மு.க. ஸ்டாலின் சர்ச்சை பேச்சு..! - Seithipunal
Seithipunal


மே மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் மாபெரும் வெற்றியை அடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் திமுக களமிறங்கியுள்ள நிலையில், "உங்கள் தொகுதியில் உங்கள் ஸ்டாலின்" என்ற பெயரில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தேர்தல் பரப்புரை பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 

இன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்ட மு.க ஸ்டாலின், " அதிமுக தலைமையிலான அரசு மருந்தில் தொடங்கி, பிளீச்சிங் பவுடர் வரை ஊழல் செய்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கிய உணவகத்திற்கு பணம் வழங்கவில்லை என குற்றசாட்டு எழுந்துள்ளது. எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற பெயரில் ஆட்சி நடைபெற்று வருகிறது.

கொள்ளையடிக்கும் ஆட்சியை ஒழிக்கும் கடமை உங்களிடம் உள்ளது. தேர்தலுக்கு பின்னர் அமையும் திமுக ஆட்சியில் உங்களின் கவலை தீரும். கலைஞர் சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்று தெரிவித்தார். கலைஞரின் மீதுள்ள நம்பிக்கையால் நீங்கள் இங்கு வந்துள்ளேர்கள். கலைஞரின் மகனான ஸ்டாலின் சொன்னதை மட்டுமே செய்வேன். நாளையை தமிழக நல்ல விதமாக அமையும். 

மக்களோடு மக்களாக நின்றவன் ஸ்டாலின். முதலைச்சர் அதனை கற்றுக்கொடுக்க தேவையில்லை. உங்களை போல கால்களை பார்த்து தேடி பதவியை வாங்கவில்லை. காலில் விழுந்து பதவி வாங்கியது இல்லை என்று மறைக்க முடியுமா? " என்று பேசினார். இதில், ரஜினியின் ஆடவன் சொல்றான், அருணாச்சலம் செய்றான் என்ற வசனத்தை மேற்கொள்காண்பித்து பேசிய மு.க. ஸ்டாலின், ஸ்டாலின் சொல்கிறான், எடப்பாடி செய்கிறார் என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore Virudhachalam MK Stalin Election Campaign 13 Feb 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->