அணில் குட்டி., அக்கா படிக்கணும்.. நீ கரண்டு கம்பிகிட்ட போகாத.. சிறுமியின் செல்ல கண்டிப்பு.!
Cuddalore Virudhachalam Child Request to Squirrel Video
தமிழகத்தில் கடந்த சில மாதமாக மின்வெட்டு பிரச்சனை இருந்து வரும் நிலையில், மின்சாரம் கம்பிகளில் அணில் செல்வதால் ஆங்காங்கே மின்வெட்டு பிரச்சனை ஏற்படுவதாகவும், பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் விரைவில் மின்வெட்டு பிரச்சனை சரியாகும் என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தார்.
அமைச்சரின் விளக்கம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், எங்கோ சில இடங்களில் அப்படி நடந்தால் பரவாயில்லை., அது ஏற்றுக்கொள்ளக்கூடியது தான். சென்னை போன்ற நகரில் புதைவடை கம்பிகள் செல்லும் சில பகுதியிகளிலும் மின்வெட்டுகள் ஏற்படுவது ஏனோ? என்ற கேள்வி எழுந்தது.
இது தொடர்பாக அமைச்சரை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் விமர்சனம் செய்த நிலையில், சிறுமி ஒருவர் வீடியோ காட்சி வெளியிட்டுள்ளார். இது குறித்த வீடியோ, கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் பகுதியை சார்ந்த சிறுமி தான் வளர்த்து வரும் அணிலுக்கு அறிவுரை கூறுவது போல உள்ளது.
இந்த வீடியோவில், " குட்டி நீ மின்சார கம்பிகள் அருகே செல்லாதே., எதற்காக உனது நண்பர்கள் மின்சார கம்பி அருகே செல்கிறார்கள். இதனால் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. அக்கா படிக்க வேண்டும் அல்லவா?. நீ மின்சார கம்பிகள் அருகே சென்றால், உன்னை யாரும் பிடித்துவிட்டு சென்றுவிடுவார்கள்., நான் உன்னை தேடி கொண்டு இருப்பேன். மின்சார கம்பிகள் அருகே செல்லாதே " என்று கூறுகிறார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Cuddalore Virudhachalam Child Request to Squirrel Video