4 வருடத்திற்கு பின்னர் மகளைக்காண ஆவலாக வந்த தந்தை.. அரங்கேறிய சோகத்தால், மனமுடைந்துபோன தந்தை.!
Cuddalore Virudhachalam Child Died in Well Father Return from Malaysia after 4 years
பணிக்காக வெளிநாடு சென்ற கணவனை அழைத்து வர மனைவி விமான நிலையத்திற்கு சென்ற நிலையில், பாட்டியின் பொறுப்பில் இருந்த 4 வயது சிறுமி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் வண்ணான்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி அன்புச்செல்வி. இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். கடந்த 4 வருடங்களுக்கு முன்னதாக மலேசியாவுக்கு சென்ற ரமேஷ், அங்கு வீட்டு வேலை செய்து குடும்பத்தை கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில், மார்ச் மாதம் 5 ஆம் தேதி மனைவி மற்றும் குழந்தைகளை காண இந்தியா திரும்பியுள்ளார். மார்ச் 5 ஆம் தேதி மலேசியாவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த ரமேசை அழைத்துவர, மனைவி அன்பு செல்வி திருச்சி விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். இதன்போது தனது மூன்று குழந்தைகளையும் தனது அம்மாவின் வீட்டில் விட்டு சென்றுள்ளார்.
வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த ரமேஷின் நான்கு வயது இளைய மகள் ரஞ்சனா ஸ்ரீ, வீட்டிலிருந்து 10 அடி தொலைவில் இருக்கும் கிணற்றுக்கு அருகே சென்றுள்ளார் சில நிமிடங்களில் ரஞ்சனாவை காணாது தேடிய உறவினர்கள், இரவு 7 மணிக்கு மேல் கிணற்றில் சிறுமியின் உடல் கிடப்பதை கண்டறிந்துள்ளனர்.
இதனையடுத்து, விஷயம் பெற்றோருக்கு தெரியப்படுத்தவே, நள்ளிரவு 12 மணிக்கு வீட்டிற்கு வந்த ரமேஷ் பிணமாக கிடந்த தனது மகளின் உடலை பார்த்து கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், 4 வருடங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து, குழந்தையை பார்ப்பதற்கு ஆசையாக வந்த போது குழந்தை உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை செய்ய தொடங்கியுள்ள நிலையில், குடியிருப்பு பகுதிகளுக்கு அருகிலேயே இருக்கும் ஆபத்தான திறந்தநிலை கிணறுகளை மூடி வைக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Cuddalore Virudhachalam Child Died in Well Father Return from Malaysia after 4 years