முத்துப்போல கிடைத்த 3 குழந்தைகளை பரிதாபமாக பறிகொடுத்த சகோதரிகள்.. கடலூரில் கண்ணீர் சோகம்.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்திலுள்ள வேப்பூர் திருப்பெயர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி மல்லிகா. இவர்களுக்கு விவேகன் என்ற மகன் இருக்கிறார். மல்லிகாவின் சகோதரி மணிமேகலை. மணிமேகலை இலக்கியனூரில் வசித்து வந்துள்ளார். மணிமேகலைக்கு விக்னேஷ் மற்றும் சர்வேஷ் என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தங்கையை பார்க்க தனது மகனுடன் திருப்பெயர் கிராமத்திற்கு மணிமேகலை சென்றுள்ளார். நேற்று மாலை 5 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகளையும் காணவில்லை. 

இதனையடுத்து பதறிப்போன பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, உடனடியாக கிராமத்திற்கு விரைந்த காவல் துறையினர் விசாரணை செய்துள்ளனர். இதன்போது, சிறுவர்களின் கால்தடம் அங்குள்ள சின்னேரி குளத்தில் தென்பட்டதாக கூறப்படுகிறது. 

பின்னர் 1தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விரைந்து வந்த தீயணைப்பு படையினர் சிறுவர்களின் உடலை தேடியதில், நீண்ட நேர தேடலுக்கு பின்னர் நள்ளிரவில் இருவரின் உடல் மீட்கப்பட்டது. இன்று அதிகாலை விக்னேஷின் உடல் மீட்கப்பட்டுள்ளது. 

மகன்களின் உடலை பார்த்து சகோதரிகள் இருவரும் கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், விசாரணை செய்து வருகின்றனர். மேலும், பிள்ளைகள் நீர் நிரம்பிய பகுதிக்கு தனியாக செல்ல கூடாது என பெற்றோர்கள் அறிவுறுத்தி வைக்குமாறும் காவல்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore Veppur Children Death in Lake Police Investigation


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->