அருட்பெருஞ்சோதியின் தரிசனம்.. வடலூரில் பக்தர்கள் உற்சவம்.!
Cuddalore Vadalure Vallalar Jothi Dharisanam 28 Jan 2021
கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. சத்தியஞான சபையில் இன்று (28/01/20201) ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதனால் பக்தர்கள் ஞான சபையில் குவிந்த வண்ணம் இருந்தனர்.
இன்று காலை 10 மணிக்கு ஜோதி தரிசனம் நடைபெற்ற நிலையில், கண்ணாடிக்கு முன்பாக கருப்பு, நீளம், பச்சை, சிவப்பு, தங்க நிறம், வெள்ளை, கருப்பு என 7 வண்ண திரைகள் இடப்பட்டு இருந்தது. திரையை ஒவ்வொன்றாக விளக்கி கண்ணாடியில் இருக்கும் ஜோதியை பார்ப்பது ஜோதி தரிசனம் ஆகும்.
வள்ளலாரின் கைகளால் ஏற்றப்பட்ட ஜோதி தீபம் பிரகாசமாக காட்சியளிக்கவே, அங்கிருந்த பக்தர்கள் " அருட்பெருஞ்சோதி " என்ற மந்திரத்தை உச்சரித்து ஜோதி தரிசனம் செய்தனர். கொரோனா ஊரடங்கு விதிமுறை காரணமாக கடைகள் மற்றும் ராட்டினங்கள் போன்றவை அமைக்க அனுமதி வழங்காத நிலையில், பக்தர்கள் குறைந்த அளவே கொரோனா அச்சம் காரணமாக வருகை தந்திருந்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Cuddalore Vadalure Vallalar Jothi Dharisanam 28 Jan 2021