கடலூர் | ஆட்டோ ஓட்டுனர் ஓட ஓட வெட்டி படுகொலை - சாலை மறியல், பதற்றம்! - Seithipunal
Seithipunal


பண்ருட்டி அருகே ஆட்டோ ஓட்டுனர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வரும் இவர், நேற்று நள்ளிரவு ஓடைப்பகுதியில் சுமன் என்ற நபருடன் மது அருந்தியதாக சொல்லப்படுகிறது.

இருவரும் திடையே ஏற்பட்ட வாய் தகராறு காரணமாக சக்திவேலை, சுமன் ஓட ஓட கத்தியால் வெட்டி படுகொலை செய்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சக்திவேலின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.

இதற்கிடையே, சக்திவேலின் உறவினர்கள் பண்ருட்டி அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுப்பதாகவும் போலீசார் உறுதியளித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore Thattanjavadi auto driver murder


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->