தாய்போல நாய்க்குட்டியை கவனித்துக்கொள்ளும் ஆண் குரங்கு.. கடலூரில் நெகிழ்ச்சி சம்பவம்.! - Seithipunal
Seithipunal


பிறந்து 10 நாட்களே ஆன குட்டி நாயை, ஆண் குரங்கு ஒன்று தாய் போல் வளர்த்து வரும் சம்பவம் நடைபெற்றுள்ளது. 

கடலூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீமுஷ்ணம் மேல் புளியங்குடி கிராமத்தில், கடந்த 10 நாட்களாக ஆண் குரங்கு பிறந்து சில நாட்களே ஆன நாய் குட்டியை வளர்த்து வந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. குரங்கிடம் இருந்து நாய்க்குட்டியை பிரித்து அக்கிராம மக்கள் தொடர்ந்து முயற்சி செய்து உள்ளனர். 

ஆனால், குரங்கு ஒரு நிமிடம் கூட நாய்க்குட்டியை கீழே விடாமல் பத்திரமாக பாதுகாத்து வருகிறது. மேலும், இதனையும் மீறி நாய்க்குட்டியை குரங்கிடம் இருந்து பிரிக்க முயற்சி செய்தால், கோபத்தோடு சீண்டி நாய்க்குட்டியை கையில் அரவணைத்து மரத்தின் உச்சிக்கே சென்றுள்ளது. 

எங்கு நாய்குட்டி கீழே விழுந்து விடுமோ என்ற பயத்தில் மக்கள் குரங்கிடம் இருந்து நாயை பிரிக்க முயற்சித்தாலும், தாயைப் பிரிந்து குரங்கின் பராமரிப்பில் இருக்கும் நாய்க்குட்டி ஆரோக்கியமாக இருப்பது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore Srimushnam Monkey Carrying Child Dog with Mothers Love


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->