திமுக பிரமுகர் மகனுக்கு வங்கிப்பணத்தை திருடிக்கொடுத்து கம்பி என்னும் மேலாளர்.! திமுக பிரமுகருக்கு வலைவீச்சு.!
Cuddalore Srimushnam DMK Supporter and City Union Bank manager Case
கடலூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீமுஷ்ணம் ஹார்டுவேர் நிறுவன உரிமையாளர் மருதை. இவர் தனது தொழில் முதலீட்டுக்காக அரியலூர் மாவட்டத்தில் உள்ள விளந்தை சிட்டி யூனியன் வங்கியில், 3 வங்கி கணக்குகள் மூலம் ரூபாய் 2 கோடியே 10 இலட்சம் ரூபாய் கடனாக பெற்று உள்ளார்.
அவரது வங்கி கணக்கில் இருந்து அவரது கையொப்பம் மற்றும் ஒப்புதல் இல்லாமல் வங்கி மேலாளர் சூரியநாராயணன் திமுக பிரமுகரின் மகன் வீரவேல் என்பவருக்கு ரூபாய் ஒரு கோடியே 28 இலட்சம் பணத்தை வழங்கியுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த 2019 ஆம் வருடம் நடைபெற்ற நிலையில், இது தொடர்பாக மருதை புகார் அளித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக வங்கி மேலாளர் சூரியநாராயணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், காவல்துறையினர் வழக்கை கிடப்பில் போட்டனர்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் வங்கி மேலாளர் சூரிய நாராயணன் மற்றும் வீரவேல் ஆகியோர் இருவரின் மீதும் நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இறுதி கட்ட விசாரணையில் அரியலூர் எஸ்.பி அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.
இருவருக்கு எதிரான சாட்சியங்களும் உறுதியாக இருந்ததால், திமுக பிரமுகர் மகன் மற்றும் வங்கி மேலாளர் சூரிய நாராயணனன் தலைமறைவாகினர். பின்னர் சூரியநாராயணன் சென்னையில் சிக்கியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில், இந்த புகாரில் தொடர்புடைய திமுக பிரமுகரின் மகன் வீரவேல் தலைமறைவாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Cuddalore Srimushnam DMK Supporter and City Union Bank manager Case