உதவி ஆய்வாளரிடம் கத்தியை காண்பித்து கொலை மிரட்டல்.. சில்வண்டு ரவுடி குண்டரில் கைது.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுச்சத்திரம் காவல் நிலையம் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சிவகுருநாதன். இவர் சம்பவத்தன்று, புதுச்சத்திரம் அருகேயுள்ள சீனிவாசபுரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டு இருந்துள்ளார். 

இதன்போது, அவ்வழியாக பதிவெண் இல்லாமல் வந்த இருசக்கர வாகனத்தை உதவி காவல் ஆய்வாளர் வழிமறிக்கவே, இருசக்கர வாகனத்தில் வந்தவர் தான் மறைத்து வைத்திருந்தக கத்தியை காண்பித்து மிரட்டி, காவல் அதிகாரியை ஆபாசமாக பேசி தாக்கியுள்ளார். மேலும், கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறான். 

இதனையடுத்து, உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் மற்றும் சக காவல் அதிகாரிகள் இருசக்கர வாகனத்தில் தௌலத் போல வந்து பேசியவனை அதிரடியாக மடக்கிப்பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், அவன் ஆலப்பாக்கம் குறவன்மேடு பகுதியை சார்ந்த நிரபு (வயது 31) என்பது தெரியவந்துள்ளது. நிரபு மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கைது செய்தனர். 

விசாரணையில், இவனின் மீது புதுச்சத்திரம், திருப்பாதிரிப்புலியூர், நெல்லிக்குப்பம், சீர்காழி, மாயவரம் உட்பட பல காவல் நிலையத்தில் 15 வழக்குகள் இருப்பது அம்பலமானது. இவன் உள்ளூரில் ரவுடி போலவும் வளம் வந்ததால், சட்டம் தன் கடமையை செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் சில்வண்டு நிரபுவை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore Puduchatram Rowdy Nirabu Arrest by Police Threatening to Sub Inspector Offence


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->