நாடககாதலுக்கு தூதுபோன தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் அடித்தே கொலை... பாசக்கார தம்பியின் பரபரப்பு சம்பவம்.!!
Cuddalore Panruti TVK Party Member Murder due to Help Of Drama Love
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ரூட்டியை அடுத்து இருக்கும் திருவதிகை எட்டப்பாளையம் தெரு பகுதியை சார்ந்தவர் பரமசிவம். இவரது மகன் சாந்தகுமார் (வயது 22). இவர் சிற்பி தொழிலாளி செய்து வந்துள்ளார். இவர் பண்ரூட்டி நகர தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிர்வாகியாகவும் இருந்து வந்துள்ளார்.
இவரது உறவினர் பெரியசாமி. இவரது மகன் சக்திவேல் (வயது 25). சக்திவேல், சந்தகுமாரும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆவார்கள். சக்திவேல் இதே பகுதியை சார்ந்த 21 வயது பெண்மணியை காதலித்து வந்துள்ளதாக தெரியவருகிறது..
இந்த காதலிற்கு சாந்தகுமாரும் உதவி செய்து வந்துள்ளார். இந்நிலையில், சக்திவேல் காதலித்து வந்த பெண்மணியிடம் ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்த நிலையில், திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்மணி, இது குறித்து பண்ரூட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சக்திவேலை கைது செய்தனர். இந்த சூழ்நிலையில், நேற்று இரவு நேரத்தில் சாந்தகுமார் அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே நின்றுகொண்டு இருந்துள்ளார். அங்கு சக்திவேல் காதலித்த பெண்மணியின் சகோதரர் ஞானவேல் வந்துள்ளார்.
தனது தங்கையின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளதற்கு சாந்தகுமாரும் ஒரு காரணம் என்று எண்ணிய ஞானவேல், தனது ஆதரவாளர்களுடன் சாந்தகுமாரை சரமாரியாக அடித்து நொறுக்கிவிட்டு தப்பி சென்றார். இந்த சம்பவத்தில் சாந்தகுமார் படுகாயமடைந்து உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஞானவேல் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வந்த நிலையில், இவர்கள் அனைவரும் அங்குள்ள தட்டான்சாவடி பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் ஞானவேல் (வயது 20), குணசேகரன் (வயது 20), கோபி (வயது 20), விஜயகுமார் (வயது 23), பிரகாஷ் (வயது 19) மற்றும் பிரதீப் (வயது 19) ஆகியோரை கைது செய்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Cuddalore Panruti TVK Party Member Murder due to Help Of Drama Love