மதுவுக்காக மனைவியை பலவந்தப்படுத்திய கொடூர கணவன்.! கடலூரில் பேரதிர்ச்சி.. பெண் கணவன் மீது பரபரப்பு புகார்.!! - Seithipunal
Seithipunal


கர்ப்பிணி மனைவியை மதுவுக்காக நண்பர்களை விட்டு பாலியல் பலாத்காரம் செய்ய வைத்த கொடூர கணவன் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. 

கடலூர் மாவட்டத்திலுள்ள பண்ருட்டி எல்.ஆர் பாளையம் பகுதியைச் சார்ந்தவர் ஜெயமணி. கடந்த 2018 ஆம் வருடத்தில் இவருக்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது இவருக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில், ஜெயமணி மீது அவரது மனைவி பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இது தொடர்பான புகாரில், " எனது கணவர் மதுவுக்கு அடிமையானவர். மது வாங்கி கொடுத்தால் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடிய எண்ணம் கொண்டவர். நான் 5 மாத கர்ப்பிணியாக இருந்தபோது சத்து மாத்திரை என்ற மயக்க மாத்திரையை கொடுத்து தன்னை மயங்க வைத்து, அரை மயக்கத்தில் இருந்த என்னை கணவனின் கூட்டாளி சுந்தரமூர்த்தி என்பவனை அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்ய வைத்துள்ளார். 

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அவனது கூட்டாளி மணிகண்டன் என்பவன் வீட்டிற்கு வந்து படுக்கையை பகிர்ந்து கொள்ள கூறி கணவனுடன் வற்புறுத்தவே, இந்த செயலுக்கு நான் மறுத்தபோது நான் கர்ப்பிணியாக இருக்கையில் என்னை சுந்தரமூர்த்தி சீரழித்த தகவலை எனது கணவர் ஜெயமணி சொல்லி காண்பித்தார். அப்போதுதான் எனக்கு உண்மை புரிந்தது. 

சம்பவத்தன்று நான் கடுமையாக எதிர்த்த போதிலும், எனது கணவரின் துணையுடன் அவனது கூட்டாளி மணிகண்டன் தன்னை பலவந்தப்படுத்தி பாலியல் அத்துமீறல் செய்தான். மேலும், இந்த விஷயத்தை வெளியே கூறினால் குழந்தையை கொலை செய்து நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று கணவர் ஜெயமணி மிரட்டுகிறான். 

அந்த சமயத்தில் குழந்தையின் எதிர்காலம் கருதி நான் புகார் அளிக்கவில்லை. இந்நிலையில், தற்போது மீண்டும் சிலரை அழைத்து வந்து என்னை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க முயற்சித்ததால், நான் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டேன். என்னையும் எனது குடும்பத்தையும் காப்பாற்றுங்கள் " என்று தெரிவித்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், ஜெயமணியை கைது செய்து விசாரிக்கையில் உண்மை தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, அவன் கொடுத்த தகவலின் பேரில் சுந்தரமூர்த்தி மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு முயற்சித்த கொடூரன்களையும் தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore Panruti Husband Abused wife with Friends for Liquor 8 June 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->